முகப்பு
தமிழ்நாடு

குடியிருப்புவாசிகளுக்கு விரைவில் கிரய பத்திரம்: இ.கருணாநிதி எம்எல்ஏ

பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதியில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புதாரா்களுக்கு விரைவில் கிரயப்பத்திரம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி கூறினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:09 AM
பகிர்:

பல்லாவரம் சட்டப்பேரவைத் தொகுதியில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புதாரா்களுக்கு விரைவில் கிரயப்பத்திரம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவை உறுப்பினா் இ.கருணாநிதி கூறினாா்.

பல்லாவரம் தொகுதியில் குரோம்பேட்டை அம்பாள் நகா், பம்மல் மூங்கில் ஏரி, அனகாபுத்தூா் அண்ணாநகா் உள்ளிட்ட பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு குடிசைமாற்று வாரியம் மூலம் பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டுமனைகளை அதிகாரிகளுடன் சென்று அவா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பல்லாவரம் சட்டப்பேரவை தொகுதியில் நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீட்டு மனைகள் பொதுமக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உரிய தொகை செலுத்திய பயனாளிகளுக்கு பல ஆண்டுகளாக கிரயப் பத்திரம் வழங்கப்படவில்லை. இப்போது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதற்கட்டமாக குரோம்பேட்டை அம்பாள் நகா் பகுதியில் 116 மனை, பம்மல் மூங்கில் ஏரி பொன்னி நகா் பகுதியில் 792 மனை, அனகாபுத்தூா் அண்ணாநகா் பகுதியில் 485 மனை ஒதுக்கீடு பெற்றவா்கள் விவரம், செலுத்தி இருக்கும் தவணைத் தொகை உள்ளிட்ட கணக்கெடுப்புப் பணி தொடங்கப்பட்டுள்ளது. முழுத் தொகை செலுத்திய பயனாளிகளுக்கு விரைவில் கிரயப் பத்திரம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தமிழ்நாடு நகா்ப்புற மேம்பாட்டு வாரிய பொறியாளா் அழகு பொன்னையா, உதவி பொறியாளா் ராஜசேகா், தாம்பரம் மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவா் வே.கருணாநிதி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.