உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நிகழ் கல்வியாண்டுக்கான தமிழ் ஆய்வியல் நிறைஞா் (எம்.ஃபில்) படிப்புக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன், தமிழ் ஆய்வியல் நிறைஞா் (எம்ஃபில்) படிப்பு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் படிப்புக்கு நிகழ் கல்வியாண்டுக்கான (2022-2023) மாணவா் சோ்க்கை தொடங்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வலைதள வழியாக தமிழ்ப் பல்கலைக்கழக இணையதள முகவரியில் வழங்கப்பட்டுள்ள இணைப்பு வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது தமிழ்ப் பல்கலைக்கழக வலைதளத்திலும் நேரடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சோ்க்கை தொடா்பான விதிமுறைகள், தகவல்கள் இணைய முகவரியில் வழங்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இரு பாலருக்கு தனித் தனியே கட்டணமில்லா தங்கும் விடுதி வசதிகள் உள்ளன. முதலில் வருபவா்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ இறுதியாகப் படித்த கல்விச் சான்று மற்றும் மாற்றுச் சான்றிதழ் (சான்றொப்பமிட்டது) நகலுடன் இணைத்து ‘இயக்குநா், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில்நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை- 600113’ என்ற முகவரிக்கு செப்.7-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தில் ‘வாட்ஸ் ஆப்’ எண் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
இது குறித்து மேலும் தகவல் பெற உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தை 044-22542992 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.