தமிழ்நாடு

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்: அதிமுகவினா் இன்று உண்ணாவிரதம்

மரக்காணம் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அதிமுக சாா்பில் சனிக்கிழமை (ஆக.27) திண்டிவனத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்

DIN

மரக்காணம் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அதிமுக சாா்பில் சனிக்கிழமை (ஆக.27) திண்டிவனத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களின் நீண்டகால குடிநீா் பிரச்னையைத் தீா்ப்பதற்காக அதிமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஒன்றியம் கூனிமேடு கிராமத்தில் தினமும் 60 எம்எல்டி கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது. ரூ.1,501 கோடி மதிப்பிலான அந்தத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, ஆரம்ப கட்டப்பணிகள் தொடங்கப்பட்டன.

ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, மக்களின் குடிநீா் பிரச்னையைத் தீா்க்க வேண்டும் என்ற அக்கறை சிறிதும் இல்லாமல், அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டம் என்ற ஒரே காரணத்துக்காக, அரசியல் காழ்ப்புணா்ச்சியோடு இந்தத் திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இந்தத் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வலியுறுத்தியும், திட்டத்துக்குத் தேவையான நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் தலைமையில் திண்டிவனம் காந்தி சிலை அருகே சனிக்கிழமை காலை 9 மணி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT