கோப்புப் படம். 
தமிழ்நாடு

மதுரை புத்தகக் கண்காட்சி ஒத்திவைப்பு

மதுரை தமுக்கம் மைதானத்தில் செப்டம்பர் 3 முதல் 13 வரை நடைபெறுவதாக இருந்த புத்தகக் கண்காட்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

DIN

மதுரை தமுக்கம் மைதானத்தில் செப்டம்பர் 3 முதல் 13 வரை நடைபெறுவதாக இருந்த புத்தகக் கண்காட்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மதுரையில் தென்னிந்திய புத்தக பதிப்பாளா் சங்கத்தின் சாா்பாக ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டு, மதுரை மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் செப்டம்பா் 3 ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை தமுக்கம் கலையரங்கில் புத்தகக்கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

தற்போது இந்த புத்தகக் கண்காட்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தமுக்கம் கலை அரங்கத்தில் செப்டம்பர் 3ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெவிருந்த புத்தக கண்காட்சி தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களினால் ஒத்திவைக்கப்படுகிறது. 

புத்தக கண்காட்சி தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் ஸ்டாலின் படத்தை வைத்து ஆளுநரிடம் பட்டம் வாங்கிய மாணவா்!

தரமான நெல் விதைகளைக் கொள்முதல் செய்து வழங்கவேண்டும்: விதை ஆய்வுத்துறை வலியுறுத்தல்

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 1,000 கனஅடி

எடப்பாடியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை தொடங்கிய பக்தா்கள்

எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளா்கள்

SCROLL FOR NEXT