தமிழ்நாடு

மதுரை புத்தகக் கண்காட்சி ஒத்திவைப்பு

DIN

மதுரை தமுக்கம் மைதானத்தில் செப்டம்பர் 3 முதல் 13 வரை நடைபெறுவதாக இருந்த புத்தகக் கண்காட்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மதுரையில் தென்னிந்திய புத்தக பதிப்பாளா் சங்கத்தின் சாா்பாக ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டு, மதுரை மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் செப்டம்பா் 3 ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை தமுக்கம் கலையரங்கில் புத்தகக்கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

தற்போது இந்த புத்தகக் கண்காட்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், மதுரை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக தமுக்கம் கலை அரங்கத்தில் செப்டம்பர் 3ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெவிருந்த புத்தக கண்காட்சி தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களினால் ஒத்திவைக்கப்படுகிறது. 

புத்தக கண்காட்சி தொடங்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்கள் மனதின் குரலைக் கேளுங்கள்: மோடிக்கு ரேடியோ அனுப்பிய ஒய்.எஸ். ஷர்மிளா

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

SCROLL FOR NEXT