முகப்பு
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: வன்புணர்வோ, கொலையோ இல்லை - நீதிமன்றம் 

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் வன்புணர்வோ, கொலையோ இல்லை  என ஜிப்மர் மருத்துவர் குழு அறிக்கையின்படி உறுதியாவதாக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

Updated On : 29 ஆகஸ்ட் 2022, 9:35 pm IST
கோப்புப் பட்ம்
பகிர்:

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் வன்புணர்வோ, கொலையோ இல்லை  என ஜிப்மர் மருத்துவர் குழு அறிக்கையின்படி உறுதியாவதாக உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் படித்துவந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி ஒருவா் மரணமடைந்தாா். இதுதொடா்பாக மாணவியின் தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் காவல்துரையினர் வழக்குப் பதிவு செய்தனா்.

தமிழ்நாடு அரசு மருத்துவ குழுக்களின் இரு உடற்கூறாய்வு அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவர் குழு அறிக்கையின்படி கருத்து கனியாமூர் பள்ளி மாணவி மரணம் வன்புணர்வோ, கொலையோ இல்லை  என உறுதியாவதாக உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

பெற்றோரின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. தற்கொலை கடிதம், சக மாணவிகளின் சாட்சியம் அடிப்படையில் மாணவி வேதியலில் சிரமப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது. இரு ஆசிரியர்களும் அறிவுரை கூறிய நிலையில், தற்கொலைக்கு தூண்டினார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில் தற்கொலைக்கு தூண்டிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ததும் தவறு. நன்றாக படிக்க சொல்வது ஆசிரியர் பணியில் ஒரு அங்கமாகுமே தவிர, தற்கொலைக்கு தூண்டும் செயல் அல்ல என நீதிபதி கூறினார். 

கனியாமூர் பள்ளி மாணவி இறப்பு வழக்கில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியைகளுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது நீதிமன்றம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments