முகப்பு
தமிழ்நாடு

வண்டலூர், கிண்டி பூங்காக்கள் இன்று மூடல்!

புயலையொட்டி மரங்கள் விழுந்துள்ளதால் பராமரிப்புப் பணி காரணமாக வண்டலூர், கிண்டி பூங்காக்கள் இன்று ஒருநாள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 10 டிசம்பர் 2022, 9:27 am IST
வண்டலூர் உயிரியல் பூங்கா
பகிர்:

புயலையொட்டி மரங்கள் விழுந்துள்ளதால் பராமரிப்புப் பணி காரணமாக வண்டலூர், கிண்டி பூங்காக்கள் இன்று ஒருநாள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று(சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது.

புயலையொட்டி நேற்று முதலே பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சூறைக்காற்றினால் பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. 

Advertisement

Advertisement

இந்நிலையில், மரங்கள் விழுந்ததாலும் பராமரிப்புப் பணி காரணமாகவும் வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அதேபோல கிண்டி சிறுவர் பூங்காவும் இன்று ஒருநாள் பராமரிப்புப் பணி காரணமாக மூடப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments