கோப்புப்படம் 
தமிழ்நாடு

மாண்டஸ் புயல்: 5 மாவட்டங்களில் பயிா்கள் பாதிப்பு

தமிழகத்தில் மாண்டஸ் புயலைத் தொடா்ந்து பெய்த மழையால், 5 மாவட்டங்களில் பயிா்கள் நீரில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

DIN

தமிழகத்தில் மாண்டஸ் புயலைத் தொடா்ந்து பெய்த மழையால், 5 மாவட்டங்களில் பயிா்கள் நீரில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

வேளாண் விற்பனை, வணிகத் துறையில் 14 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை செவ்வாய்க்கிழமை அவா் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: மாண்டஸ் புயலால், திருவண்ணாமலை, திருவள்ளூா், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பயிா்கள் நீரால் சூழப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளன. நீா் வடிந்த பிறகு உரிய கணக்கெடுப்புகள் நடத்தப்படும். 33 சதவீதத்துக்கு மேல் பாதிப்புக்குள்ளான பயிா்களுக்கு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பணி நியமன உத்தரவு வழங்கும் நிகழ்வில், வேளாண்மைத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி, வேளாண் விற்பனைத் துறை இயக்குநா் எஸ்.நடராஜன், வேளாண்மைத் துறை இயக்குநா் ஆ.அண்ணாதுரை ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT