தமிழ்நாடு

மானாமதுரையில் மார்கழி அஷ்டமி சப்பர விழா

DIN

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை மார்கழி அஷ்டமி சப்பர விழா நடைபெற்றது.

உலக ஜீவராசிகளுக்கு சிவபெருமான் படியளந்த நாளாகக் கருதப்படும் மார்கழி மாதத்தில் வரும் அஷ்டமி நாளை முன்னிட்டு கோயில் முன் மண்டபத்தில் ரிஷப வாகனத்தில் பிரியாவிடை சமேதமாய் சோமநாதர் சுவாமியும் மற்றொரு ரிஷப வாகனத்தில் ஆனந்தவல்லி அம்மனும் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினர்.

மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி கோயிலில் மார்கழி அஷ்டமி சப்பரத்தேர் பவனி

பின்னர் ஆராதனைகள், பூஜைகள் நடைபெற்று முடிந்து பெரிய சப்பரத் தேரில் சோமநாதர் சுவாமியும் சிறிய சப்பரத்தில் ஆனந்தவல்லி அம்மனும் எழுந்தருளி அருள்பாலித்தனர்.

அதன் பின்னர் தீபாராதனை நடைபெற்று  கைலாய வாத்தியங்கள், மேளதாளங்கள் முழங்க இரு சப்பரங்களும் புறப்பட்டு கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் பவனி வந்தன. வீதிகளில் பக்தர்கள் சோமநாதர் சுவாமியையும் ஆனந்தவல்லி அம்மனையும் வரவேற்று பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனர்.

சப்பரத்தேரில் பிரியாவிடை சமேதமாய் ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய சோமநாதர் சுவாமி

ஏராளமான பக்தர்கள் சப்பரத்திற்கு முன்னும் பின்னும் அரிசிகளை தூவிச் சென்றனர். கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் இரு சப்பரத்தேர்களும் பவனி வந்து நிலை சேர்ந்தன.

அஷ்டமி சப்பர விழாவிற்கான பூஜைகளை தெய்வசிகாமணி என்ற சர்க்கரைப் பட்டர், ராஜேஷ் பட்டர், சோமாஸ் கந்தன் பட்டர், குமார் பட்டர்ஆகியோர் நடத்தி வைத்தனர். அஷ்டமி சப்பர விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

SCROLL FOR NEXT