தமிழ்நாடு

'காவலர் தேர்வில் இனி தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம்'

காவலர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

DIN

காவலர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவிகிதம் மதிப்பெண்கள் எடுத்தால் பட்டுமே காவலர் பணிக்காக எழுதுத்தேர்வு கணக்கில் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலர், காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வுகளுக்கு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. 

அதன்படி காவலர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவிகிதம் மதிப்பெண்களாவது எடுக்க வேண்டும். அப்போதுதான் காவலர் பணிக்காக எழுதுத்தேர்வு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 

இதனால் தமிழ்நாடு காவலர் தேர்வில் இனிமேல் இரண்டு தேர்வுகள் நடைபெறும். அதில் தேர்வு 1-ல், தமிழ் பாடத்தில் 80 வினாக்கள் கேட்கப்படும். குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.  

தேர்வு 2-ல் வழக்கம்போல் நடைபெறும் தேர்வு. பொது அறிவு 50 வினாக்களும், உளவியல் கேள்விகள் 30 கேட்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலர்களுக்குத் தனியாக நடத்தப்படும் இந்த தமிழ்த் தகுதி தேர்வு 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

SCROLL FOR NEXT