தமிழ்நாடு

'காவலர் தேர்வில் இனி தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம்'

காவலர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

DIN

காவலர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயம் என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவிகிதம் மதிப்பெண்கள் எடுத்தால் பட்டுமே காவலர் பணிக்காக எழுதுத்தேர்வு கணக்கில் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலர், காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வுகளுக்கு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. 

அதன்படி காவலர்கள் பணிக்கான எழுத்துத் தேர்வில் தமிழ் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவிகிதம் மதிப்பெண்களாவது எடுக்க வேண்டும். அப்போதுதான் காவலர் பணிக்காக எழுதுத்தேர்வு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். 

இதனால் தமிழ்நாடு காவலர் தேர்வில் இனிமேல் இரண்டு தேர்வுகள் நடைபெறும். அதில் தேர்வு 1-ல், தமிழ் பாடத்தில் 80 வினாக்கள் கேட்கப்படும். குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும்.  

தேர்வு 2-ல் வழக்கம்போல் நடைபெறும் தேர்வு. பொது அறிவு 50 வினாக்களும், உளவியல் கேள்விகள் 30 கேட்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவலர்களுக்குத் தனியாக நடத்தப்படும் இந்த தமிழ்த் தகுதி தேர்வு 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT