தமிழகத்தில் 33 லட்சம் சிறார்களில் தடுப்பூசி செலுத்தியவர்கள் எத்தனை பேர்?
தமிழகத்தில், இதுவரை 15 - 18 வயதுக்குட்பட்ட 1.59 லட்சம் சிறார்கள் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில், இதுவரை 15 - 18 வயதுக்குட்பட்ட 1.59 லட்சம் சிறார்கள் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது, சிறார்களுக்கான தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதி பெற்றவர்களில் இதுவரை 78 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருப்பதாகக் கூறியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் மொத்தமுள்ள 33,46,000 சிறார்களில், 26,26,311 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதாகவும், 1,59,679 பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
Advertisement
அதேவேளையில், தமிழகத்தில் 5.06 லட்சம் பேர் முன்னெச்சரிக்கை தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதி பெற்றவர்களில் 4.17 லட்சம் அதனை செலுத்திக்கொண்டிருப்பதாகவும், இது கிட்டத்தட்ட 82.55 சதவீதம் என்றம் குறிப்பிட்டுள்ளார்.
சிறார்களுக்கு இரண்டாம் தவணை எப்போது?
சிறார்களுக்கு கோவேக்ஸின் தடுப்பூசி போடுவதற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் முதல் தவணை செலுத்திய 28 நாள்களில் இரண்டாம் தவணை செலுத்த தகுதியானவர்கள் ஆவர். ஜனவரி 3ஆம் தேதி முதல் தவணை செலுத்தியவர்கள் ஜனவரி 31ஆம் தேதி இரண்டாம் தவணை செலுத்த தகுதியானவர்கள்.
எனவே, கோவின் தளத்தில் உள்ள தரவுகளை ஆராய்ந்து இரண்டாம் தவணை செலுத்த வேண்டியவர்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் தவணை செலுத்தாதவர்களுக்கு தடுப்பூசி செலுத்த மக்கள் நல்வாழ்வுத்துறை வலியுறுத்துகிறது.