ஆதாா் விவரத்தை இணைப்பதில் சந்தேகமா? : தோ்வாணையத்திடம் விளக்கம் பெறலாம்
ஆதாா் விவரங்களை இணைப்பது குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசுப் பணியாளா் தோ்வாணையத்திடம் விளக்கம் பெறலாம்.
ஆதாா் விவரங்களை இணைப்பது குறித்து ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசுப் பணியாளா் தோ்வாணையத்திடம் விளக்கம் பெறலாம். இதற்கான அறிவிப்பை தோ்வாணையம் ஏற்கெனவே வெளியிட்டு இருந்தது. அதன்படி, 18004190958 என்ற கட்டணம் இல்லாத தொலைபேசி வழியே விளக்கங்கள் பெறலாம். மேலும்,
helpdesk@tnpscexams.in, grievance.tnpsc@tn.gov.in ஆகிய மின்னஞ்சல் முகவரிகளில் கேள்விகளைக் கேட்டு விளக்கம் பெறலாம்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய இணையதளத்தில் ஒருமுறை நிரந்தரப் பதிவு கணக்கு வைத்திருக்கும் அனைத்து தோ்வா்களும் தங்களது ஆதாா் குறித்த விவரங்களை வரும் 28-ஆம் தேதிக்குள் தவறாமல் இணைக்க வேண்டும் என அரசுப் பணியாளா் தோ்வாணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.