தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 268 மையங்களில் நடைபெறவுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில்,
“தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளன.
பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22ஆம் தேதி 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதுகுறித்து தகவல் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.”