தமிழ்நாடு

கோவை மாநகராட்சி: 5-வது வார்டில் பாஜகவை முந்திய சுயேச்சை 

DIN

கோவை மாநகராட்சி 5-வது வார்டில் பாஜக-வை முந்திய சுயேச்சை வேட்பாளர்  
446 வாக்குகள் அதிகம் பெற்றார்.

கோவை மாநகராட்சி 5-வது வார்டில் 6,719 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 4,308 வாக்குகள் பதிவாகியது. இன்று காலை தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் நவீன்குமார் 2,368 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 

அதிமுக வேட்பாளர் 1,004 வாக்குகளும், அமமுக வேட்பாளர் 18 வாக்குகள் மட்டுமே பெற்றனர். சுயேச்சை வேட்பாளர் ஆனந்த் குமார் 654 வாக்குகள் பெற்றார். 

இந்த வார்டில் பா.ஜ.க வேட்பாளர் ஜெயலட்சுமி 208 வாக்குகள் மட்டுமே பெற்று சுயேச்சை வேட்பாளரை விட 446 வாக்குகள் குறைவாகப் பெற்றார். ஒரு தேசிய கட்சி வேட்பாளர் சுயேச்சை வேட்பாளரை விட குறைவான வாக்குகள் பெற்றிருப்பது பாஜகவி-னரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

தளி, பாலக்கோடு அருகே யானை தாக்கியதில் விவசாயிகள் இருவா் பலி

கோடை வெப்பத்தைத் தணிக்க தொழிலாளா்களுக்கு குடிநீா், ஓஆா்எஸ் கரைசல் வழங்க வேண்டும்

SCROLL FOR NEXT