தமிழ்நாடு

தூத்துக்குடி மாநகராட்சி தேர்தல்: 20 வார்டுகளில் திமுக வெற்றி

DIN

    
தூத்துக்குடி மாநகராட்சியில் காலியாக உள்ள 60 வார்டுகளுக்கான தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. தேர்தலில் 59.11 சதவீத வாக்குகள் பதிவாகின. பதிவான வாக்குகள் அனைத்தும் தூத்துக்குடி வஉசி அரசு பொறியியல் கல்லூரியில் வைத்து செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டன.
 
காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், முதலில் அஞ்சல் வாக்குகள் எண்ணப்பபட்டன. பின்னர், 15 மேஜைகளில் 1 முதல் 15 வார்டுகளில் பதிவான வாக்குகள் முதல் தளத்தில் வைத்தும், 31 முதல் 45 ஆவது வார்டுகளில் பதிவான வாக்குகள் இரண்டாவது தளத்தில் வைத்தும் எண்ணப்பட்டன.

இதில், 20 வார்டுகளில் திமுகவும், 2 வார்டுகளில் அதிமுகவும், 2 வார்டுகளில் காங்கிரஸ் வேட்பாளர்களும், 4 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளரும், மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளரும் வெற்றி பெற்று உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகாசி அருகே மீண்டும் வெடிவிபத்து!

இந்தியா்களுக்கான உணவு வழிகாட்டுதல்: புரதச்சத்து பொடிகளைத் தவிா்க்க வேண்டும் - ஐசிஎம்ஆர்

நிலவிலிருந்து படமனுப்பிய பாகிஸ்தான் செயற்கைக்கோள்

எஸ்என்ஆா் வித்யாநேத்ரா மெட்ரிக்.பள்ளி 100% தோ்ச்சி

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா் 75 போ் கைது

SCROLL FOR NEXT