உக்ரைன்-ரஷியா போர் விலகி, அமைதி திரும்ப வேண்டி தோரணமலை முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனை. 
தமிழ்நாடு

உக்ரைன்-ரஷியா இடையே அமைதி திரும்ப தோரணமலை முருகன் கோயிலில் இன்று சிறப்பு பிரார்த்தனை

உக்ரைன்-ரஷியா போர் விலகி, அமைதி திரும்ப வேண்டி தோரணமலை முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

DIN

பாவூர்சத்திரம்: உக்ரைன்-ரஷியா போர் விலகி, அமைதி திரும்ப வேண்டி தோரணமலை முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

உக்ரைன்-ரஷியா போர் விலகிடவும், இந்திய மாணவர்கள் மற்றும் மக்கள் நலமுடன் நாடு திரும்பவும், போர் நடைபெறும் நாட்டு மக்கள் நிம்மதி வாழ்வு வாழவும் வேண்டி, தென்காசி மாவட்டம், தோரணமலை முருகன் கோயில் அடிவாரத்தில் வெள்ளிக்கிழமை காலை பக்தர்கள் பங்கேற்புடன், சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஓதுவார் மூர்த்தி சங்கரசட்டநாதன் தேவாரம், திருப்பாவை பாடினார். 

உக்ரைன்-ரஷியா போர் விலகி, அமைதி திரும்ப வேண்டி தோரணமலை முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் கலந்துகொண்டோர்.

மேலும் நாள் முழுவதும் மலை மேல் உள்ள முருகனுக்கு போர் விலகக் கோரி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர் கே.செண்பகராமன் தலைமையில் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா அபார வெற்றி - புகைப்படங்கள்

டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி ஜஸ்பிரித் பும்ரா சாதனை!

எழுதாத பேனாவை நடுக்கடலில் வைக்க ரூ. 82 கோடி தேவையா? - எடப்பாடி பழனிசாமி கேள்வி

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT