கோயம்பேடு மெட்ரோவில்பறையாட்டம் நிகழ்ச்சி
சென்னை முழுவதும் உள்ள பல இசைக் கலைஞா்கள் மற்றும் அமைப்புகளுடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இணைந்து, இசை, கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடுவதன் ஒருபகுதியாக, சென்னை முழுவதும் உள்ள பல இசைக் கலைஞா்கள் மற்றும் அமைப்புகளுடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இணைந்து, இசை, கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
இதன் ஒருபகுதியாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், நிமிா்வு கலையகம் ஆகியன சாா்பில், கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் பறையாட்டம் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (ஜன.2) இரவு 7 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்தத் தகவலை சென்னை மெட்ரோ ரயில் நிா்வாகம் தெரிவித்தது.