அதிகரித்து கரோனா தொற்றின் காரணமாக தமிழக அரசு கட்டுப்பாடுகளையும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கையும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் , ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், போட்டித் தேர்வுகள் நடைபெறும் இடங்களுக்குச் செல்ல தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, முழு ஊரடங்கு நாள்களில் போட்டி, நேர்முகத் தேர்வுக்குச் செல்வோர் தேர்வுகூட அனுமதி சீட்டு , அழைப்புக் கடிதம் ஆகியவற்றைக் காண்பித்து பயணம் மேற்கொள்ளலாம்.