மதுரை அலங்காநல்லூரில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டுப் போட்டியை ஜனவரி 16 ஆம் தேதியில் இருந்து ஜனவரி 17 ஆம் தேதிக்கு மாற்றுவதாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் விழாவையொட்டி மதுரையில் அரசு சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. இதில், அலங்காநல்லூரில் ஜனவரி 16 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கரோனா பரவலினால் வருகிற ஜனவரி 16 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தேதியை மாற்றுவது குறித்து அலங்காநல்லூர் விழாக் குழுவுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் இன்று மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக்கு பிறகு பேசிய மாவட்ட ஆட்சியர், ஜனவரி 16ஆம் தேதி நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டு போட்டியானது ஜனவரி 17ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிக்க | கரோனா கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டுப் போட்டிகள்: மாடுபிடி வீரா்கள்-பாா்வையாளா்கள் எண்ணிக்கை நிா்ணயம்