திருப்பத்தூர் எஸ்பி, எம்எல்ஏக்கு கரோனா தொற்று
திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி மற்றும் எம்எல்ஏ ஆகிய இருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி மற்றும் எம்எல்ஏ ஆகிய இருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
திருப்பத்தூர் எம்எல்ஏ அ.நல்லதம்பிக்கு திங்கள்கிழமை இரவு கரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை மாவட்ட எஸ்பி கி.பாலகிருஷ்ணனுக்கு தொற்று உறுதியானது. அதையடுத்து இருவரும் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.