கோப்புப்படம் 
தமிழ்நாடு

முழு பொதுமுடக்கத்துக்கான அவசியமில்லை: மா. சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்துவதற்கான தேவையில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

DIN


தமிழ்நாட்டில் முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்துவதற்கான தேவையில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் இதுபற்றி கூறுகையில், "தற்போதைய சூழலில் முழு பொதுமுடக்கத்தை அமல்படுத்துவதற்கான தேவையில்லை. பொருளாதாரம் பாதிப்படைந்துவிடக் கூடாது என முதல்வர் வலியுறுத்தியுள்ளார். தற்போதைக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கே போதுமானது" என்றார்.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 முதல் ஜனவரி 18 வரை வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள இரவுநேர ஊரடங்கு ஜனவரி 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT