வருகிற ஜனவரி 16 ஆம் தேதி பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படாது என்றும் அன்று பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திருப்பித் தரப்படும் என்றும் தமிழக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் சென்னையில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி இன்று 2,000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதனிடையே பொங்கல் சிறப்புப் பேருந்துகளில் 75% பயணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், கரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் வருகிற ஜனவரி 16 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று கூறியுள்ளது.
இதையடுத்து, வருகிற ஜனவரி 16 ஆம் தேதி பொங்கல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படாது என்று போக்குவரத்துத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 16 அன்று பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு இரு நாள்களில் கட்டணம் திருப்பித் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.