தமிழ்நாடு

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ரத்ன அங்கி சேவை

DIN


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வியாழக்கிழமை உற்சவர் தேவராஜ சுவாமி ரத்ன அங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதும், அத்திவரதர் பெருவிழா புகழ் பெற்றதுமானது காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் திருக்கோயில். இங்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் வைகுண்ட ஏகாதசித் திருநாளன்று மட்டும் உற்சவர் தேவராஜசுவாமி ரத்ன அங்கியில் பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கமாக இருந்து வருகிறது. மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் அத்திகிரி மலையிலிருந்து ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவர் தேவராஜ சுவாமி ரத்ன அங்கி சேவையில் கோயில் வளாகத்தில் உள்ள கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளினார். ரத்ன அங்கி சேவையில் உற்சவர் தேவராஜசுவாமியையும்,பெருந்தேவித்தாயாரையும் பக்தர்கள் பலரும் தரிசனம் செய்தனர்.

முன்னதாக பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடந்தன. கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆலயத்துக்குள் பக்தர்கள் அதிகமாக அனுமதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பாரதிராஜா சார், பாருங்க... வெள்ளை நிற தேவதை... ஆண்ட்ரியா...

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

SCROLL FOR NEXT