தமிழ்நாடு

புதுவையில் அச்சுறுத்தும் கரோனா: ஒரே நாளில் 1,213 பேருக்கு தொற்று; இருவர் பலி

DIN

புதுச்சேரி:  புதுவை மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொண்ட கரோனா பரிசோதனையில், புதுச்சேரியில் 1,100 நபர்களுக்கும், காரைக்காலில் 93 பேர், ஏனாமில் 3 பேரும், மாஹேவில் 17 பேர் என  மொத்தம் 1,213 நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மாநிலத்தில் தற்போது  6,785 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தோற்று பாதித்த இருவர் உயிரிழந்துள்ளதால், மொத்தம் பலி எண்ணிக்கை 1,886 ஆனது.

மேலும் மாநிலத்தில் இதுவரை 1,27,879 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1,36,550 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா தடுப்பூசி முதல் தவணை 9,05,903 பேரும், இரண்டாம் தவணை 5,88,020 பேரும் செலுத்தியுள்ளனர்.

மொத்தமாக 14,95,877 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். புத்தாண்டு முதல் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

SCROLL FOR NEXT