கோப்புப் படம் 
தமிழ்நாடு

புதுவையில் ஜன.31 வரை தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு விடுமுறை

புதுவையில் உள்ள அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் ஜனவரி 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

DIN

புதுவையில் உள்ள அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் ஜனவரி 31-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

புதுவையில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை என்ற அறிவிப்பை அந்த மாநில கல்வி அமைச்சர் நமச்சிவாயம் ஏற்கனவே வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் (ஐடிஐ) முதல்வர் என்.ரங்கசாமி அறிவுறுத்தலின் பேரில், ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அறிவிப்பை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா புதன்கிழமை வெளியிட்டுள்ளார்.

இதனால் புதுவை மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை த் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கும் இன்று முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வசந்த் ரவியின் இந்திரா டிரைலர்!

இபிஎஸ் கனவு பலிக்காது, மீண்டும் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பார்: அமைச்சர் கே.என். நேரு

ஃபஹத் ஃபாசிலின் ஓடும் குதிர சாடும் குதிர டிரைலர்!

மாநகரம் - கூலி உறங்கா இரவுகள்... கலை இயக்குநர் பற்றி லோகேஷ் பெருமிதம்!

பெங்களூரில் மஞ்சள் தடத்தில் மெட்ரோ ரயில் சேவை: பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்!

SCROLL FOR NEXT