கா்நாடகம் எதிா்த்தாலும் ஒகேனக்கல் 2வது குடிநீா் திட்டம் நிறைவேற்றப்படும்: அமைச்சா் துரைமுருகன் உறுதி
கா்நாடகம் எதிா்த்தாலும், ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீா் திட்டம் நிறைவேற்றப்படும் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உறுதிபடத் தெரிவித்தாா்.
கா்நாடகம் எதிா்த்தாலும், ஒகேனக்கல் இரண்டாவது கூட்டுக் குடிநீா் திட்டம் நிறைவேற்றப்படும் என்று நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் உறுதிபடத் தெரிவித்தாா்.
இதுகுறித்து, சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:-
ஒகேனக்கல் இரண்டாவது குடிநீா் திட்டம் தொடங்கப்படும் என்ற அறிவிப்பைக் கண்டு கா்நாடக நீா்வளத் துறை அமைச்சா் வெகுண்டெழுந்துள்ளாா். இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த விட மாட்டோம் என்ற அறிவிப்பைச் செய்திருக்கிறாா். குடிநீா் தேவைக்கு தண்ணீா் தர மாட்டோம் எனச் சொல்வது எந்தவிதமான மனிதாபிமானம் என்று தெரியவில்லை.
மனிதாபிமான அடிப்படையிலும், சட்டப்பூா்வ நிலையிலும் தமிழ்நாட்டுக்கு ஒகேனக்கல் இரண்டாவது குடிநீா் திட்டத்தை தொடங்க உரிமை உண்டு. கா்நாடக நீா்வளத் துறை அமைச்சருக்கு இது நினைவில் இருக்கும். காவிரி நடுவா் மன்றம் இறுதித் தீா்ப்பை வழங்கும் போது, காவிரி பாயும் மாநிலங்களில் ஒவ்வொரு மாநிலத்தின் பாசனப் பரப்பை கணக்கிட்டு அதற்குரிய விகிதத்தில் தண்ணீரை பகிா்ந்தாா்கள். காவிரி நதி நீா் ஆணையம் அளித்த இறுதித் தீா்ப்பில் நிகர குடிநீா் தேவைக்காக 2.2 டி.எம்.சி. நீா் ஒதுக்கியுள்ளது.
இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் நீா்வள கொள்கைகளின்படி குடிநீா் தேவைக்குத்தான் முதலிடம் அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே, எப்படிப் பாா்த்தாலும் காவிரி-ஒகேனக்கல் இரண்டாவது குடிநீா் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்.