தமிழ்நாடு

திருவையாறில் தியாகராஜ ஆராதனை விழா

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சனிக்கிழமை நடைபெற்ற தியாகராஜ ஆராதனை விழாவில் ஸ்ரீதியாகராஜருக்கு இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி அஞ்சலி செலுத்தினர்

DIN


தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சனிக்கிழமை நடைபெற்ற தியாகராஜ ஆராதனை விழாவில் ஸ்ரீதியாகராஜருக்கு இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.

ஆண்டுதோறும் இவ்விழா 5 நாட்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக ஒரு நாள்  மட்டுமே நடைபெறுகிறது.

ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள் சித்தியடைந்த புஷ்ய பகுள பஞ்சமி நாளான சனிக்கிழமை காலை 5.30 மணிக்கு உஞ்ச விருத்தி பஜனை, 8.30 மணிக்கு நாதஸ்வர இசை ஆகியவை நடைபெற்றன. இதைத்தொடர்ந்து, காலை 9 மணி முதல் 10 மணி வரை பஞ்ச ரத்ன கீர்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.

பிரபஞ்சம் எஸ். பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், தொடக்கத்தில் நாட்டை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஜகதாநந்த காரக ஜய ஜானகீ ப்ராண நாயக...' என்ற பாடல் பாடப்பட்டது. இதைத்தொடர்ந்து, கௌளை ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'துடுகு கல நந்நே தொர கொடுகு ப்ரோசுரா எந்தோ...' என்ற பாடலும், ஆரபி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'ஸாதிஞ்சநெ ஓ மநஸா...' என்ற பாடலும், வராளி ராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'கனகன ருசி ராக நகவஸந நிந்நு...' என்ற பாடலும், இறுதியாக ஸ்ரீராகம், ஆதி தாளத்தில் அமைந்த 'எந்தரோ மஹாநுபாவுலு அந்தரிகி வந்தநமு...' ஆகிய பாடல்களைப் பாடி அஞ்சலி செலுத்தினர்.

இதில், பிரபல இசைக் கலைஞர்கள் மஹதி, கடலூர் ஜனனி, விசாகா ஹரி, அரித்துவாரமங்கலம் ஏ.கே. பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் வி. ராஜா ராவ், திருப்பாம்புரம் சகோதரர்கள், எம்.ஆர். வாசுதேவன், வடுவூர் கிருஷ்ணமூர்த்தி, டி.ஆர். கோவிந்தராஜன், டி.பி. ராதாகிருஷ்ணன் உள்பட ஏறத்தாழ 100 இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் ஸ்ரீதியாகராஜருக்கு அஞ்சலி செலுத்தினர்.

விழாவில் ஸ்ரீ தியாக பிரம்ம மகோற்சவ சபா தலைவர் ஜி.கே. வாசன், அறங்காவலர் எஸ். சுரேஷ் மூப்பனார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆண்டுதோறும் இவ்விழாவில் ஆயிரக்கணக்கான இசைக்கலைஞர்கள் ஆர்வலர்கள் பங்கேற்று பாடி அஞ்சலி செலுத்துவது வழக்கம். நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, மிகக் குறைவான அளவிலேயே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT