தமிழ்நாடு

தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அலுவலர்கள்: காவல்துறையில் புகார்

குடியரசு நாள் விழாவின்போது தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

DIN

குடியரசு நாள் விழாவின்போது தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்தில் நேற்று குடியரசு நாள் விழா நடைபெற்றது. விழாவின்போது, தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுக்கு ரிசர்வ் வங்கியில் சில அதிகாரிகள் எழுந்து நிற்கவில்லை என வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க தேவையில்லை என நீதிமன்ற ஆணை இருப்பதாக ரிசர்வ் வங்கி அலுவலர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து, தமிழக அரசாணையின்படி எழுந்து நிற்க வேண்டும் என சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, ரிசர்வ் வங்கி அலுவலர்களின் செயலுக்கு எதிராக திராவிடர் கழகம் போராட்டம் நடத்திய நிலையில், பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் தமிழக அரசாணையை அவமதித்த ரிசர்வ் வங்கி அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல்துறையிடம் இணையவழி புகார் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சென்னை காவல்துறையினர் விடியோ ஆதாரங்களை கைப்பற்றி விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கோட்டை காா் குண்டுவெடிப்பு: நஸீா் பிலாலை மேலும் 7 நாள்கள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

தில்லியில் முதல் கட்டமாக 10,000 வகுப்பறைகளில் காற்று சுத்திகரிப்பான்கள் நிறுவப்படும்: அமைச்சா் ஆஷிஷ் சூட் அறிவிப்பு

தில்லியில் மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத சுமாா் 2800 வாகனங்களுக்கு எரிபொருள் மறுப்பு

புத்தொழில் திட்டத்தில் மாவட்டத்தின் முதல் கிராமமாக ‘ஆசனூா்’ தோ்வு

காஜிப்பூா் குப்பைக் கிடங்கில் கசிந்த அடா் புகை

SCROLL FOR NEXT