பெசன்ட் நகர் கடற்கரை(கோப்புப்படம்) 
தமிழ்நாடு

பிப்ரவரி 1 முதல் கடற்கரைகளுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி

பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் சென்னையில் கடற்கரைகளுக்கு மக்கள் செல்லலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

DIN


சென்னை: பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் சென்னையில் கடற்கரைகளுக்கு மக்கள் செல்லலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் கரோனா தொற்று மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்ததை அடுத்து தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம், கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி மறுப்பு, வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்கள், தேவாலயங்களுக்கு மக்கள் செல்ல தடை என பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சென்னையில் மெரீனா, பெசண்ட் நகர் கடற்கரை மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

கடந்த சில நாள்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து அனைத்து கட்டுப்பாடுகளையும் தளர்த்தி அரசு உத்தரவிட்டது. இதையடுத்து இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் அனைத்து வணிக நிறுவனங்கள், மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியது. 

இந்நிலையில், பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு மக்கள் செல்லலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

மேலும் கடற்கரைகளில் கூட்டமாக கூடக் கூடாது. முகக்கவசம் அணிந்து செல்வது போன்ற கரோனா கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து: மத்திய அரசு பதிலளிக்க 4 வாரம் அவசாசம்

கோவையில் அதிகரிக்கும் காய்ச்சல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம் - சுகாதாரத் துறை அறிவுறுத்தல்

சான்றிதழ்களை முறையாக பதிவேற்ற வேண்டும்: குரூப் 1 தோ்வா்களுக்கு டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தல்

ஹரியாணா காவல் துறை ஐஜி தற்கொலை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியல்

SCROLL FOR NEXT