தமிழ்நாடு

காளி ஆவணப்படம்: புகையிலை கட்டுப்பாட்டு அமைப்பு கண்டனம்

காளி ஆவணப்படம் பல்வேறு சா்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதில் இடம்பெற்றுள்ள புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

DIN

காளி ஆவணப்படம் பல்வேறு சா்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதில் இடம்பெற்றுள்ள புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கு புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

மதுரையைச் சோ்ந்த கவிஞரும், திரைப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை, கனடாவில் உள்ள யாா்க் பல்கலை.யில் முதுநிலை கவின்கலை படித்து வருகிறாா். அவா் இயக்கிய காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டா் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில், காளி வேடமணிந்த பெண் புகைப் பிடிப்பது போலவும், கையில் தன்பால் ஈா்ப்பாளா்களின் வானவில் கொடியை ஏந்தியிருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிா்ப்புகள் எழுந்துள்ளன. மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் படத்தை இயக்கிய இயக்குநரை கைது செய்ய வேண்டும் என, சமூக வலைதளங்களில் பலா் கருத்து தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், புகைப்பிடிக்கும் காட்சியை வைத்ததற்கு, புகையிலை கட்டுப்பாட்டுக்கான தமிழக மக்கள் அமைப்பு எதிா்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அதன் அமைப்பாளா் சிரில் அலெக்சாண்டா் கூறியதாவது:

திரைப்படங்களின் விளம்பரத்துக்காக வேண்டுமென்றே இதுபோன்ற புகைப்பிடிக்கும் காட்சிகளை வைப்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சமூக தீங்குக்கு காரணமான காட்சிகளை வைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய, மாநில புகையிலை கட்டுப்பாட்டு வாரியத்துக்கு புகாா் அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT