உச்சநீதிமன்றம் 
தமிழ்நாடு

‘ஓபிஎஸ் கட்சி செயல்பாட்டை முடக்கப் பார்க்கிறார்’: இபிஎஸ் மனு

அதிமுகவின் செயல்பாடு மற்றும் பொதுக்குழுவை ஓ.பன்னீர்செல்வம் முடக்கப் பார்ப்பதாக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.

DIN

அதிமுகவின் செயல்பாடு மற்றும் பொதுக்குழுவை ஓ.பன்னீர்செல்வம் முடக்கப் பார்ப்பதாக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஒற்றைத் தலைமை பிரச்னையில், உயர்நீதிமன்ற கட்டுப்பாடுகளை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதேபோல், பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவும் உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகின்றது.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் மனுவில் தெரிவித்திருப்பதாவது:

“பொருளாளரான ஓ. பன்னீர்செல்வம் கட்சி நிதியை விடுவிக்காததால், ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியவில்லை. கட்சி செலவுக்கான தொகையையும் எடுக்க முடியாத நிலையை ஓபிஎஸ் ஏற்படுத்தியுள்ளார்.

தனக்கான செல்வாக்கு, நம்பிக்கையை இழந்துவிட்டதால்தான் பொதுக்குழுவுக்கு ஓபிஎஸ் தடை கோருகிறார். அதிமுக செயல்பாடுகளையும், பொதுக்குழு செயல்பாட்டையும் முடக்கப் பார்க்கிறார். இந்த செயல்பாட்டை நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT