தமிழ்நாடு

தகுதியான பேராசிரியர் விவகாரம்... 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை நோட்டீஸ்

DIN

தமிழகத்தில் உள்ள 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

தமிழகத்தில் உள்ள  பொறியியல் கல்லூரிகளில் 476 பொறியியல் கல்லூரிகளில் ஆய்வு நடத்திய அண்ணா பல்கலைக்கழகம், 225 கல்லூரிகளில் தகுதியான பேராசிரியர்கள், முதல்வர்கள், உரிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதது தெரியவந்தது. 

இதையடுத்து தமிழகத்தில் உள்ள பொறியில் கல்லூரிகளில் 225 பொறியியல் கல்லூரிகளில் தகுதியான பேராசிரியர்கள், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாதது குறித்து விளக்கம் அளிக்குமாறு அந்த அண்ணா பல்கலைக்கழகம் நோடீஸ் அனுப்பியுள்ளது. 

இதுகுறித்து 2 வாரங்களில் விளக்கமளிக்க வேண்டும் என்றும், உரிய விளக்கமளிக்காவிட்டால் அங்கீகார நீட்டிப்பு வழங்கப்படாது, மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே பிஇ., பி.டெக்., பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு இதுவரை 1,43,313-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகவும், 96,759-க்கும் மேற்பட்டோர் கட்டணம் செலுத்தியுள்ளனர். 65,171 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர் என தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT