FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பொறியியல், கலைக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்: க. பொன்முடி

பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க, கால அவகாசம் தேதி குறிப்பிடாமல் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்துள்ளார்.

Updated On : 8 ஜூலை 2022, 4:27 pm IST
அமைச்சர் பொன்முடி
பகிர்:


சென்னை: பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க, கால அவகாசம் தேதி குறிப்பிடாமல் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி அறிவித்துள்ளார்.

சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக, தேர்வு முடிவு வெளியாகி 5 நாள்கள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | ஜூலை 18-இல் பொறியியல் கல்லூரிகள் திறப்பு

Advertisement

Advertisement

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கூறியிருப்பதாவது, சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், தேதி குறிப்பிடாமல் பொறியியல் மற்றும் கலைக் கல்லூரிகளில் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்படுகிறது என்றார்.

தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க கால அவகாசம் நேற்றுடன் முடிந்துவிட்டது. பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வரும்  17ஆம் தேதி கடைசி நாளாக இருந்த நிலையில், இந்த கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.

மேலும் அமைச்சர் கூறியிருப்பதாவது, கல்லூரி மாணவிகளுக்கான ரூ.1,000 திட்டத்துக்கு இதுவரை 2 லட்சம் மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.  அரசு கலைக் கல்லூரிகளில் சேர 3 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதாகவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments