தமிழ்நாடு

கார்த்தி சிதம்பரம் இல்லத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் மீண்டும் சோதனை

DIN

சென்னை நுங்கம்பாக்த்தில் உள்ள கார்த்தி சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர். 

பஞ்சாப் மாநிலத்திலிருந்து 243 சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கிய வழக்கில் கடந்த மே 17ஆம் தேதி கார்த்திக் சிதம்பரத்திற்கு சொந்தமான பல இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மே 17 சோதனை நடத்தியபோது ஒரு அறை மட்டும் பூட்டப்பட்டிருந்ததால் அங்கு சோதனை நடத்தப்படவில்லை எனத் தெரிவித்த சிபிஐ அதிகாரிகள் தற்போது அதனை சோதனை செய்து வருகின்றனர்.

7 பேர் கொண்ட அதிகாரிகள் மேற்கொண்டு வரும் இந்த சோதனையில் விசா வழங்கியது தொடர்பாக ஏதேனும் ஆவணங்கள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT