சங்ககிரியில் பக்ரீத் சிறப்புத் தொழுகை!
சேலம் மாவட்டம், சங்ககிரியில் பக்ரீத் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டன.
சங்ககிரி : சேலம் மாவட்டம், சங்ககிரியில் பக்ரீத் பண்டிகை ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டன.
பக்ரீத் பண்டிகையொட்டி சங்ககிரி, சங்ககிரி மேற்கு பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மலையடிவாரத்தில் உள்ள முஸ்லீம் தெருவிலிருந்து தேர்வீதி, சந்தைப்பேட்டை வழியாக ஊர்வலமாக சென்று பால்வாய் பகுதியில் உள்ள ஈத்கா மைதானத்தில் அரசு காஜி ஃகாரி முஹம்மத் உவைஸ் தலைமையில் சிறப்புத் தொழுகை நடத்தினர்.
இதில் அதிகமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர் பக்ரீத் பண்டிகையின் சிறப்புகள் மற்றும் குர்ப்பாணி கொடுப்பதன் நோக்கம் குறித்து தமிழில் விளக்கிக் கூறினார்.