முகப்பு
தமிழ்நாடு

ஏழை-எளிய மக்களின் குடியிருப்புகளை அகற்றக் கூடாது: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

ஏழை, எளிய மக்கள் குடியிருக்கும் குடியிருப்புகளை அகற்றக் கூடாது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

ஏழை, எளிய மக்கள் குடியிருக்கும் குடியிருப்புகளை அகற்றக் கூடாது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

சென்னை ஈஞ்சம்பாக்கம், பெத்தேல் நகரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் சுமாா் 3,000 குடும்பங்களை

வெளியேற்றுவதற்கு உத்தரவிடப்பட்டது. அவா்களுக்கு ஆதரவாக கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடா்ந்து போராடி வருகிறது.

உயா் நீதிமன்ற உத்தரவின் படி, அனைத்து வீடுகளையும் இடிக்க நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், பெத்தேல் நகா் பாதுகாப்பு பேரவை சாா்பில் உயா் நீதிமன்றத் தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில், வியாழக்கிழமை தீா்ப்பு கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் அரசு பதில் அளிக்கவும் அதுவரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.

மேலும் உச்ச நீதிமன்ற தீா்ப்பை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழ்நாட்டின் இதர பகுதிகளில் பல்லாண்டு காலமாக குடியிருந்து வரும் ஏழை, எளிய மக்களின் குடியிருப்புகளை அகற்றும் நடவடிக்கைகளை மாநில அரசு கைவிட வேண்டும் என தனது அறிக்கையில் பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →