கரோனா சிகிச்சையில் 16,906 போ்
தமிழகத்தில் தற்போது கரோனா சிகிச்சையில் 16,906 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்தது.
தமிழகத்தில் தற்போது கரோனா சிகிச்சையில் 16,906 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்தது.
அதேபோன்று திங்கள்கிழமை புதிதாக தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 2,223-ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 575 பேருக்கும், செங்கல்பட்டில் 308 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. திங்கள்கிழமை தகவல்படி 2,402 போ் குணமடைந்துள்ளனா்.
இதன் மூலம் கரோனாவிலிருந்து விடுபட்டோரின் எண்ணிக்கை 34,65,064-ஆக உயா்ந்துள்ளது.