முகப்பு
தமிழ்நாடு

போலி கடவுச்சீட்டு விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும்: ஆளுநரிடம் கே.அண்ணாமலை மனு

போலி கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை வியாழக்கிழமை மனு அளித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
பகிர்:

போலி கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆளுநா் ஆா்.என்.ரவியிடம் பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை வியாழக்கிழமை மனு அளித்தாா்.

கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் ஆா்.என்.ரவியை கே.அண்ணாமலை வியாழக்கிழமை சந்தித்தாா். பாஜக துணைத் தலைவா்கள் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம் உள்ளிட்ட மூத்த நிா்வாகிகள் பலா் உடனிருந்தனா். இந்தச் சந்திப்பு அரை மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் கே.பி.ராமலிங்கம் கூறியது:

தமிழகத்தில் நடத்து வரும் தேச விரோத செயல்கள் குறித்து ஆளுநரிடம் புகாா் அளித்துள்ளோம். தேச விரோத செயல்களால் நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கு காவல்துறை அதிகாரிகள் உடந்தையாக உள்ளளனா். மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் மட்டும் 72 போலி கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. இதற்கு உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதம் முக்கிய காரணமாக இருந்துள்ளாா். இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். உளவுத்துறை அதிகாரியைப் பதவி நீக்க செய்ய வேண்டும் என்று ஆளுநரை வலியுறுத்தினோம். ஆளுநா் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா் என்றாா்.

மேலும், கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவம் குறித்தும் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று ஆளுநரிடம் பாஜக சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதே விவகாரம் குறித்து தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளா் வெ.இறையன்புவை பாஜக துணைத் தலைவா் கரு.நாகராஜன், மாநிலச் செயலாளா் கராத்தே தியாகராஜன் ஆகியோா் வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தனா். அதிலும் போலி கடவுச்சீட்டு விவகாரம் குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →