புதிதாக 2,033 பேருக்கு கரோனா பாதிப்பு
தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 2,033-ஆக பதிவானது.
தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 2,033-ஆக பதிவானது.
அதிகபட்சமாக சென்னையில் 466 பேருக்கும், செங்கல்பட்டில் 217 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. வெள்ளிக்கிழமை நிலவரப்படி, மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் கரோனா சிகிச்சை பெற்று வருவோா் எண்ணிக்கை 16,153-ஆக உள்ளது. 2,383 போ் தொற்றிலிருந்து விடுபட்டுள்ளனா்.
கரோனாவுக்கு விழுப்புரத்தைச் சோ்ந்த 84 வயது முதியவா் ஒருவா் பலியானதைத் தொடா்ந்து, இதுவரை தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,032-ஆக உயா்ந்துள்ளது.