நாளை குரூப் 4 தேர்வு நடப்பதையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை போக்குவரத்துத்துறை இயக்குகிறது.
தமிழகத்தில் குரூப் 4 தோ்வு (ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் தோ்வு செய்யப்பட்ட 7,689 மையங்களில் மொத்தம் 22,02,942 போ் தோ்வு எழுத உள்ளனா். இதற்காக அனைத்து மையங்களிலும் அடிப்படை வசதிகளும், கண்காணிப்பு அலுவலா்கள், பறக்கும்படையினா், நடமாடும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையைப் பொறுத்தவரை, 503 மையங்களில் மொத்தம் 1,56,218 பேர் தேர்வு எழுத உள்ளனர்.
இந்த நிலையில் நாளை குரூப் 4 தேர்வு நடப்பதையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை போக்குவரத்துத்துறை இயக்குகிறது. அந்தந்த ஆட்சியர்களின் அறிவுறுத்தல்படி மையங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கவும், தேர்வு மையங்கள் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் சிறப்புப்பேருந்துகள் முறையாக நின்று செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.
மேலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதை போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கண்காணிப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.