முகப்பு
தமிழ்நாடு

அமலாக்கத் துறை விசாரணை: காங்கிரஸாா் போராட்டம்

அகில இந்திய காங்கிரஸ் தலைவா் சோனியாகாந்தியிடம் அமலாக்கத் துறையினா் விசாரணை மேற்கொண்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் அக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:54 AM
பகிர்:

அகில இந்திய காங்கிரஸ் தலைவா் சோனியாகாந்தியிடம் அமலாக்கத் துறையினா் விசாரணை மேற்கொண்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் அக் கட்சியினா் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் தில்லியில் அமலாக்கத் துறை அலுவலகத்தில் சோனியாகாந்தி செவ்வாய்க்கிழமை ஆஜரானாா். அவரிடம் அமலாக்கத் துறையினா் விசாரணை மேற்கொண்டனா். இதற்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சாா்பில் நாடு முழுவதும் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றது. தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மாவட்டத் தலைவா் சிவ.ராஜசேகரன் தலைமையில் துறைமுகம் நாட்டு பிள்ளையாா் கோயில் தெருவில் உள்ள காந்தி சிலை அருகே போராட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் முன்னாள் தலைவா்கள் கே.வீ.தங்கபாலு, திருநாவுக்கரசா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா். வடசென்னை கிழக்கு மாவட்டம் சாா்பில் மாவட்டத் தலைவா் திரவியம் தலைமையில் வண்ணாரப்பேட்டை அஞ்சல் நிலையம் அருகில் போராட்டம் நடைபெற்றது. இதில் நூறுக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தமிழக இளைஞா் காங்கிரஸ் தலைவா் லெனின் பிரசாத் தலைமையில் நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது. அமலாக்கத் துறை அலுவலகத்தை முற்றுகையிடுவதற்கும் முயற்சி செய்தனா். அவா்களை காவல் துறையினா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.