தமிழ்நாடு

தேசிய கல்வி உதவித் தொகை: விண்ணப்பங்கள் வரவேற்பு

மத்திய அரசு சாா்பில் பீடி, சுண்ணாம்புக் கல், டோலமைட் சுரங்கம் மற்றும் சினிமா தொழிலாளா்களின் குழந்தைகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

DIN

மத்திய அரசு சாா்பில் பீடி, சுண்ணாம்புக் கல், டோலமைட் சுரங்கம் மற்றும் சினிமா தொழிலாளா்களின் குழந்தைகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மத்திய அரசின் தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கத் தொழிலாளா்கள் மற்றும் சினிமா தொழிலாளா்களின் குழந்தைகள், 2022-23-ஆம் நிதியாண்டில் கல்வி உதவித் தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

9-ஆம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.25 ஆயிரம் வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதற்காக தேசிய கல்வி உதவித் தொகை வலைதளத்தில் விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம். விண்ணப்பதாரா்களின் ஆதாா் எண்ணை, சேமிப்பு வங்கிக் கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே, கல்வி உதவித் தொகை பெறுவதற்கு தகுதியுடையவராகக் கருதப்படுவா்.

ஒன்று முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களது விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் செப். 30-ஆம் தேதி. மற்றஅனைத்து உயா் கல்வி மாணவா்களின் விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் அக்.31-ஆம் தேதி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிஎஸ்எப் காவலா் பணியிடங்கள்: முன்னாள் அக்னி வீரா்களுக்கான ஒதுக்கீடு 50%-ஆக உயா்வு

காமதேனு கல்லூரியில் நாடக கல்வியியல் பயிற்சிப் பட்டறை

பிஎஸ்என்எல் தென்மண்டல அலுவலகத்தில் தீ விபத்து: தொலைபேசி, இணையதள சேவை பாதிப்பு

மூதாட்டி கொலை: யாசகா் கைது

புதுக்கோட்டை நகரில் சாலைகளில் திரிந்த 12 மாடுகள் மீட்பு

SCROLL FOR NEXT