முகப்பு
தமிழ்நாடு

சீர்காழி சட்டைநாதர் கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தருமபுரம் ஆதீனத்திற்கு உள்பட்ட சட்டைநாதர் கோயிலில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தருமபுரம் ஆதீனத்திற்கு உள்பட்ட சட்டைநாதர் கோயிலில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.

30 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் செய்திட திருப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் திருப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சீர்காழி கோயில் கட்டளை விசாரணை சொக்கலிங்கம் தம்பிரான், மாவட்டச் செயலாளர் நிவேதா.முருகன் எம்எல்ஏ, மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், மாவட்டப் பொருளாளர் ரவி, ஒன்றியக் குழுத் தலைவர்கள் கமலஜோதி தேவேந்திரன், ஜெயபிரகாஷ், நகர மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி நகரச் செயலாளர் சுப்பராயன், ஒன்றியச் செயலாளர்கள் பிரபாகரன், செல்ல சேது ரவிக்குமார், சசிகுமார், மலர்விழி திருமாவளவன், மாவட்ட கவுன்சிலர் விஜயஸ்வரன் மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் முத்துக்குபேரன் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து திருவெண்காடு சுவேதாரணேஸ்வரர் சுவாமி கோயிலிலும் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.