தமிழ்நாடு

ஓய்வு பெறும் நாளில் ஆவின் தலைமையக விற்பனை மேலாளர் பணியிடை நீக்கம்

DIN


சென்னை ஆவின் தலைமையக விற்பனை மேலாளர் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

சென்னை நந்தனம் ஆவின் தலைமையகத்தில் விற்பனை மேலாளராக பணியாற்றி வந்தவர் புகழேந்தி. இவர் தனி பணிக்காலத்தில் நிதியிழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இந்நிலையில்,  விற்பனை மேலாளர் புகழேந்தி ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

அவர் மீது துறைரீதியான தணிக்கை தொடர்வதாகவும், நிதியிழப்பு மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆவின் பொது மேலாளர் தெரிவித்துள்ளார். 

சமீபத்தில், மதுரை மண்டல பால்வளத்துறை துணை ஆய்வாளர் கிறிஸ்துதாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், மேலும் ஓர் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது அரசு அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாரதிதாசன் பிறந்த நாள் விழா

ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்: நான்கு பிரிவுகளில் சிபிசிஐடி வழக்கு

முன்னாள் அமைச்சா் சீனிவாஸ் பிரசாத் காலமானாா்

கடும் வெயிலால் கருகி வரும் வாழை மரங்கள்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

மேக்கேதாட்டு காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா்கள் 5 போ் பலி

SCROLL FOR NEXT