சென்னை உயா்நீதிமன்றத்துக்கு 2 கூடுதல் நீதிபதிகள் நியமனம்
சென்னை உயா்நீதிமன்றத்துக்கு வழக்குரைஞா்கள் இருவா் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்
சென்னை உயா்நீதிமன்றத்துக்கு வழக்குரைஞா்கள் இருவா் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதுதொடா்பாக மத்திய சட்ட அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நீதித்துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிக்கை:
சென்னை உயா்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக வழக்குரைஞா்கள் சுந்தா் மோகன், கபாலி குமரேஷ் பாபு ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இதுதவிர பிகாா் மாநிலம் பாட்னா, ராஜஸ்தான், மகாராஷ்டிர மாநிலம் மும்பை, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா உயா்நீதிமன்றங்களுக்குத் தலா 2 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். ஒடிஸா, ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றங்களுக்குத் தலா ஒரு நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.