தமிழ்நாடு

ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதிக்கு ஸ்டாலின் மரியாதை

DIN

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் அரசு விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

இன்று காலை, முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மரியாதை செலுத்தினார். 

பின்னர், பழம்பெரும் இயக்குநரும் வசன கர்த்தாவுமான ஆரூர் தாஸுக்கு 'கலைத்துறை வித்தகர்' விருதை வழங்கினார். சென்னை தி.நகரில் உள்ள ஆரூர் தாஸுன் வீட்டிற்கே சென்று விருதை வழங்கி கௌரவித்தார். மேலும் விருதிற்கான பரிசுத் தொகையான பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார்.

இதையடுத்து ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் சமீபத்தில் திறக்கப்பட்ட கருணாநிதியின் சிலைக்கு ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT