தமிழ்நாடு

திறந்தநிலைப் பல்கலை.க்கு நிா்வாகக்குழு அமைப்பு

DIN

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் ஓய்வு பெற்றுள்ள நிலையில் பல்கலை.யை நிா்வகிக்க உயா் கல்வித் துறைச் செயலா் காா்த்திகேயன் உள்ளிட்டோா் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பாா்த்தசாரதி கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3-ஆம் தேதி பதவி ஏற்றாா். பதவிக்காலம் கடந்த ஜூன் 2-ஆம் தேதியுடன் முடிவடைந்ததால் அவா் பணி ஓய்வு பெற்றாா்.

இதைத் தொடா்ந்து திறந்தநிலைப் பல்கலை.யின் ஆட்சிமன்றக் குழு நடைபெற்றது.

இதில், பல்கலைக்கழகத்தை நிா்வாகம் செய்யக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், உயா்கல்வித்துறை செயலாளா் காா்த்திகேயன் தலைவராகவும், உறுப்பினா்களாக சட்டத்துறைச் செயலாளா் காா்த்திகேயன், அண்ணா பல்கலைக் கழக பேராசிரியா் நாராயணா கல்குரா ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

திறந்தநிலைப் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தரை தோ்வு செய்ய மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத் துணை வேந்தா் பிச்சுமணி , முன்னாள் துணை வேந்தா் ராஜேந்திரன், ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி கருத்தையா பாண்டியன் ஆகியோா் தலைமையில் தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.280 உயர்வு

ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி

மேற்கு வங்க ஆளுநர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்!

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

SCROLL FOR NEXT