தமிழ்நாடு

கடலூர் அருகே கெடிலம் ஆற்றில் மூழ்கிய 7 பெண்கள் சாவு: கிராமமே சோகத்தில் மூழ்கியது

DIN

கடலூர்: கடலூர் அருகே கெடிலம் ஆற்றின் தடுப்பணையில் குளித்தபோது நீரில் மூழ்கிய 7 பெண்கள் ஞாயிற்றுக்கிழமை மதியம் இறந்தனர்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் கடலூர் அடுத்த அருங்குணம் ஏ.குச்சிப்பாளையத்தில் கெடிலம் கெடிலம் ஆறு பாய்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதியில் தண்ணீரை தடுத்து வைக்கும் அளவில் தடுப்பணை அமைக்கப்பட்டது. இந்த தடுப்பணையில் தற்போது சேறும் சகதியுமாக உள்ளதாம்.

இந்நிலையில், அதேப் பகுதியைச் சேர்ந்த மோகன் மகள் நவநீதம் (20), அவரது மருமகளும் குணாள் மனைவியுமான பிரியா (19) ஆகியோர் குளிக்க சென்றுள்ளனர். உடன், அவர்களது வீட்டிற்கு வந்திருந்த குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த உறவினரான ராஜகுரு மகள்கள் பிரியதர்ஷினி (13), காவியா (11) ஆகியோரும் குளிக்கச் சென்றுள்ளனர்.

இதில், தடுப்பணை சேற்றில் சிக்கிய ஒருவரை காப்பாற்ற முயன்றவரும் சேற்றில் சிக்கிக் கொண்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் நின்றுக் கொண்டிருந்த முத்துராமன் மகள் சுமதா (16), அமர்நாத் மகள் மோனிகா (16), சங்கர் மகள் சங்கவி (15) ஆகியோரும் காப்பாற்றச் சென்றவர்களும் சேற்றில் சிக்கிக் கொண்டனர். 

தகவலறிந்த அப்பகுதியினர் ஆற்றுக்குள் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஒருவர் பின் ஒருவராக 7 பேரையும் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

தகவலறிந்த கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் திரண்டு கதறி அழுததால் அப்பகுதியே சோகமாக மாறியது. 

மேலும், ஒரே கிராமத்தில் 5 பேர் இறந்ததாலும், இறந்த அனைவரும் உறவினர்கள் என்பதாலும் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது.

இதில், இறந்த பிரியா ஒரு மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்துக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

SCROLL FOR NEXT