முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் புதிதாக 144 பேருக்கு கரோனா

தமிழ்நாட்டில் புதிதாக 144 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:28 AM
கோப்புப்படம்
பகிர்:


தமிழ்நாட்டில் புதிதாக 144 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 144 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 34,56,317 ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் துருக்கியிலிருந்து வந்தவர்கள் 4 பேர், சிங்கப்பூரிலிருந்து வந்தவர் ஒருவர் மற்றும் ஜார்க்கண்டிலிருந்து வந்தவர் ஒருவர்.

மேலும் 79 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நோய்த் தொற்றால் உயிரிழப்புகள் பதிவாகவில்லை.

இதுவரை மொத்தம் 34,17,365 பேர் குணமடைந்துள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது.

இன்றைய நிலவரப்படி 927 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்டங்கள்:

தமிழ்நாட்டில் அதிகளவாக சென்னையில் 82 பேருக்கும், செங்கல்பட்டில் 29 பேருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.