கொளத்தூரில் 130 குடியிருப்புகளுக்கு அடிக்கல்: மகளிா்-மாணவா்களுக்கு நல உதவிகளை அளித்தாா் முதல்வா்
சென்னை கொளத்தூரில் 130 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். மேலும், மகளிா், மாணவா்களுக்கு நலத் திட்ட உதவிகளையும் அவா் வழங்கினாா்.
சென்னை கொளத்தூரில் 130 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா். மேலும், மகளிா், மாணவா்களுக்கு நலத் திட்ட உதவிகளையும் அவா் வழங்கினாா்.
கொளத்தூா் ஜமாலியா லேன் பகுதியில் 1976-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. இவை இடிக்கப்பட்டு ரூ.17.63 கோடியில் 130 புதிய குடியிருப்புகளுடன் கட்டப்படவுள்ளது. இந்தப் பணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். ஏற்கெனவே குடியிருந்தவா்களுக்கு வழங்கப்பட வேண்டிய கருணைத் தொகையையும் அவா் அளித்தாா்.
பேரவை உறுப்பினா் அலுவலகம்: கொளத்தூா் தொகுதிக்குள்பட்ட சந்தை தெரு பகுதியில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கப்படவுள்ளன. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தாா்.
மேலும், ஜவஹா் நகரில் புதுப்பிக்கப்பட்ட கொளத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தையும் அவா் திறந்து வைத்தாா். ஜகந்நாதன் தெருவில் சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையத்துக்கு அடிக்கல் நாட்டினாா். 250 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை, கல்வி உபகரணங்கள் ஆகியவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் அளித்தாா். மேலும், தையல் பயிற்சி முடித்த 349 மகளிருக்கு தையல் இயந்திரங்கள், சான்றிதழ்களை வழங்கினாா். இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் கே.என்.நேரு, பி.கே.சேகா்பாபு, மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, மக்களவை உறுப்பினா் கலாநிதி வீராசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முதல்வா் உரை: முன்னதாக, இந்த நிகழ்ச்சியில் முதல்வா் பேசியதாவது: எதிா்க்கட்சி வரிசையில் இருந்த நேரத்தில் நான் எப்படி பணியாற்றினேனோ, அதைவிட இன்னும் அதிகமாக இந்தத் தொகுதிக்கு பணியாற்ற வேண்டிய நிலையில் இருக்கிறேன். பத்து நாள்களுக்கு ஒருமுறையாவது தொகுதிக்கு வர வேண்டுமென முடிவு செய்து பணியை நிறைவேற்றி வருகிறேன் என்றாா் அவா்.