முகப்பு
தமிழ்நாடு

கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம்! முதல்வர் சூளுரை

கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம் என முதல்வர் பதிவு...

Updated On : 17 மார்ச், 2026 at 5:44 AM
கீழடியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)
பகிர்:

நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

கீழடியில் 11-வது கட்டம், ஆதிச்சனூா், நாகப்பட்டினம் உள்பட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி செய்ய மத்திய தொல்லியல் துறையிடம் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் ஒப்புதல் வேண்டி கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

சுமார் 8 மாதங்கள் காலதாமதத்துக்குப் பின்னர், 8 இடங்களிலும் தமிழ்நாடு தொல்லியல் துறை அகழாய்வு நடத்துவதற்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருப்பதாவது:

“தொடர் அழுத்தத்தாலும், கடிதங்களாலும் கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்வதற்கான மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுள்ளோம். பல மாதங்கள் தாமதத்துக்குப் பின்பு, நமது விடாமுயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது!

அடுத்து, மத்திய பா.ஜ.க. அரசு வெளியிடாமல் நிறுத்தி வைத்திருக்கும் கீழடி ஆய்வறிக்கையையும் வெளியிட வைப்போம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

"We will ensure the release of the Keeladi research report as well!" — Chief Minister

முழு கட்டுரையைப் படிக்க →